கிராம நிர்வாக அலுவலர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்…

வாடியூரில் தூய்மை பணியாளர்களின் கொரோனா கால தடுப்பு பணிகளை போற்றும் வகையில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், வீகே.புதூர் வட்டம், சுரண்டை அருகே வாடியூர் கிராம அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ஆறுமுகம்  தலைமையில்,தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கி கெளரவிக்கும் விழா நடைபெற்றது.

இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, ஹக்கீம், பாலமுருகன், பத்மாவதி, மாரியப்பன், கலந்து கொண்டு, வாடியூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களின் தூய்மை பணிகளை பாராட்டி  பொன்னாடை போர்த்தி சிறப்பித்தும், அரிசி மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரண உதவி வழங்கி கெளரவித்தனர். கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்கினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!