இராமநாதபுரத்தில் விஸ்வகர்ம தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி..

கொரானா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தேசிய ஊரடங்கு உத்தரவால் மார்ச் 25 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் விஸ்வகர்ம தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதித்தது.

இதனையடுத்து ராமநாதபுரம் விஸ்வகர்ம தொழிலாளர்கள் 150 பேர் குடும்பங்களுக்கு, விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் மற்றும் விஸ்வகர்ம நண்பர்கள் சார்பில் அரிசி மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் நா.மலைக்கண்ணு, நகர் தலைவர் எம்.பெருமாள், செயலாளர் எம்.சின்னமுருகன், பொருளாளர் கருப்பையா, இளைஞரணி செயலர்  கோவைமணி நகர் துணைச் செயலர்கள் கே. சூரியபிரகாஷ், எஸ்.கே.குமார், டி.செல்லதுரை, வைரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உதவி வழங்கினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!