இலங்கையில் உறவினரை கொலை செய்த 2 சிங்களர் உள்பட 4 பேர் ராமநாதபுரத்தில் கைது ..

இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் சிங்க சிராந்தா. சொத்து தகராறில் தனது நண்பர் சப்ராஸ் உடன் சேர்ந்து உறவினர் ஒரு வரை கடந்த சில வாரங்களுக்கு முன் கொலை செய்தார். இலங்கை போலீசார் பிடியில் இருந்து இருவரும் தப்பி இந்தியா வர திட்டமிட்டனர். இதையடுத்து, ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் மார்க்கத்தில் மர்மப்படகில் வந்தனர். இதன் பின்னர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பின்புறம் தங்கப்பாபுரம் விஐபி நகரில் மண்டபம் சேது நகரைச்சேர்ந்த ரியாஸ், முகமது கையூம் ஆகியோருடன் சேர்ந்து வாடகை வீடு எடுத்து கடந்த இரு வாரங்களாக தங்கியிருந்தனர்.

இது குறித்து மத்திய குற்றப் பிரிவு போலீசார், கேணிக்கரை போலீசார் அவர்களை நேற்றிரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிங்களர் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!