சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து கருப்பூர் பகுதியில் லாட்டரி சீட்டு விநியோகம் செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கருப்பூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், விற்பனையில் ஈடுபட்ட அஸ்தம்பட்டி கண்ணன், சேட்டு, சலீம் , ரவி, சண்முகம், சீனிவாசன், ராஜேந்திரன், சிவக்குமார் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர்.


You must be logged in to post a comment.