மதங்களை பற்றி அவதுறாக வாட்ஸ் அப்பில் பதிவு வெளியிட்ட ராஜசேகரன் மீது இராமேஸ்வரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை ஆகஸ்ட் 10ம் தேதி வரை சிறையில் அடைக்க இராமேஸ்வரம் நீதிபதி (பொறுப்பு) பாலமுருகன் உத்தரவிட்டார்.
அதே போல் மதங்கள் பற்றி அவதூறு வீடியோ வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பூந்தோட்ட தெரு அன்பரசன் மகன் ராஜசேகரன், 30. தற்போது இவர் ராமேஸ்வரம் வாலறுந்த ஹனுமன் கோயில் தெருவில் வசிக்கிறார். பல்வேறு மதங்கள் குறித்து சமூக வலைதளங்கள் இவர் அவதூறு வீடியோ காட்சிகள் பதிவிட்டதாக ராமேஸ்வரம் வி.ஏ.ஓ. ரோட்கோ புகார் அளித்தார். இதனடிப்படையில் ராமேஸ்வரம் எஸ்.ஐ., அருநின் குமார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ராஜசேகரனை கைது செய்தார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









