வேலூரில் காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த ரௌடி கைது..

சிறைத்துறை அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியீட்டு புல்லட் நாகராஜ் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைக்கு ஆஜர்படுத்தப்பட்டான்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல் மங்கலத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறைச்சாலை பெண் அதிகாரியை கொலை செய்துவிடுவதாக மிரட்டி ஆடியோ வெளியிட்டான். இதனை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலைய பெண் ஆய்வாளரையும் மிரட்டி ஆடியோ வெளியீட்டு அதைத்தொடர்ந்து நாகராஜன் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜர்படுத்தப்பட்டார் வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் மீண்டும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து வருகின்ற 20.02.19 அன்று மீண்டும் வழக்கு விசாரனைக்கு மீண்டும் ஆககா உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து புல்லட் நாகராஜன் வேலூர் மத்திய சிறைக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!