மின் இணைப்பு வழங்க விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்பொறியாளர் கைது..

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

பிரம்மகுண்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் தனது 4 ஏக்கர் விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க வடபொன்பரப்பி உதவி மின் பொறியாளர் மணிகண்டனை அணுகியுள்ளார். மின் பொறியாளர் மணிகண்டன் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்கவே, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அன்பழகன் புகாரளித்தார்.

இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை விவசாயி அன்பழகனிடம் கொடுத்தனிப்பினர் அந்த ரூபாய் நோட்டுக்களை கொடுக்கும்போது மறைந்திருந்த அதிகாரிகள் மின்பொறியாளர் மணிகண்டனை கையும் களவுமாகக் கைது செய்தனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!