பழனி பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா கடத்திய வாலிபர் கைது..

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நல்லதம்பி, தர்மராஜ் ஆகியோர் இரவு ரோந்து பணியை மேற்கொண்டபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் கேரளாவைச் சேர்ந்த சனீஸ் (20)என்பதும் கஞ்சா கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து பழனி போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!