கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது…

நேற்று (15.01.19) D2 – செல்லூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முருகன் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கரிசல்குளம், நகர் பேருந்து நிறுத்தம் அருகே HONDA DIO என்ற இருசக்கர வாகனத்தில் வெள்ளை நிற சாக்குப்பையுடன் சந்தேகப்படுபடியாக நின்று கொண்டிருந்தவர்களை விசாரணை செய்த போது (1) ராஜபாரதி 22/19, விளாங்குடி, மதுரை (2) ரஞ்சித் 38/19, விளாங்குடி, மதுரை 3. திலீபன் 21/19, மீனாம்பாள்புரம், மதுரை ஆகியோர்கள் கஞ்சா விற்பனை செய்யும் தொழில் செய்வது விசாரணையில் தெரியவந்து எனவே மூவர் மீதும் D2 செல்லூர் காவல் ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் வழக்கு பதிவுசெய்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.2,550/- ம், மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!