தேவிபட்டினம் அருகே மது பாட்டில் திருடியவர் கைது…

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் சாலை ஓரமுள்ள டாஸ்மாக் கடையில் ரூ.96,270 மதிப்பிலான 437 மது பாட்டில்கள் நவ.25 இல் இரவு திருடு போனது. இது தொடர்பாக சூபர்வைசர் முத்துமாரி புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் குகனேஸ்வரன் வழக்கு பதிந்து விசாரித்து வந்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் தனிப்படை அமைத்து தேட அறிவுறுத்தினார்.

இதையடுத்து ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் ஆலோசனை பேரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் சார்பு ஆய்வாளர் குகனேஸ்வரன், தனிப்பிரிவு தலைமை காவலர் முரளி கிருஷ்ணன், ஏட்டு கருப்பசாமி, போலீஸ்காரர் வேல்முருகன் தலைமையில் தனிப்படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் புல்லாணி அம்மன் கோயில் சத்திரம் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மோகன் 23 என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் மது பாட்டில்களை மோகன் திருடியது தெரிந்தது. திருடு போன மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் மோகனை கைது செய்தனர். ஐந்தே நாளில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா பாராட்டினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!