இராமநாதபுரம், அக்.12-இலங்கையில் இருந்து தமிழக கடல் பகுதிகள் வழியாக தங்கக்கட்டிகள் அடிக்கடி கடத்தி வரப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகள் வழியாக பீடி இலை, கஞ்சா, கஞ்சா எண்ணெய், ஐஸ் எனும் உயர் ரக போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு கடத்திவந்த தங்கக் கட்டிகளை சென்னைக்கு காரில் கடத்தி செல்வதாக தகவல் கிடைத்தது. இதன்படி, திருச்சி- ராமநாதபுரம் நெடுஞ்சாலையில்
மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அக். 9 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நடத்திய சோதனையில் தேவிபட்டினம் பகுதியில் இருந்து வந்த காரில் இருந்த 7.55 கிலோ தங்கக்கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
இது தொடர்பாக காரில் இருந்த தேவிபட்டினத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்த தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.4.50 கோடி என கூறப்படுகிறது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









