37 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் – ஒருவர் கைது…

இராமநாதபுரம், செப், 3.

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் வன உதவி பாதுகாவலர் சுரேஷ்குமார், வனவர் ராஜேஷ் குமார் தலைமையில் வனத்துறையினர் தேவிபட்டினம் கடலோரப் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு இடத்தில் கடல் அட்டைகள் பதப்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு விரைந்த வனத்துறையினர் பனைக்குளம் அருகே தோப்புக்காடு பகுதியில், பதுக்கி வைத்திருந்த 37 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  தேவிபட்டினம் செய்யது இப்ராஹிம் மகன் முஹமது மன்சூர் அலி (23) என்பவரை கைது செய்தனர். கடல் அட்டைகளை பதப்படுத்த பயன்படுத்திய அடுப்பு, பாத்திரங்களையும் கைப்பற்றினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!