பெண்ணை தாக்கி கொலைமுயற்சி செய்த வழக்கில் கொத்தனாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை..

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவர் கடந்த 2017-ம் வருடம் வீடு கட்டி வந்துள்ளார் அப்போது பெருங்குடியைச் சேர்ந்த வேல்பாண்டி என்பவர் கொத்தனாராக ராமலெட்சுமி வீட்டில் வேலை செய்துவந்துள்ளார். அப்போது ராமலட்சுமிக்கும் வேல்பாண்டிக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் ராமலட்சுமியின் தலையில் வேல்பாண்டி இரும்பினாலான சுத்தியலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ராமலட்சுமி அவனியாபுரம் காவல் நிலையத்தல் கொடுத்திருந்தார்.

அப்புகாரை பெற்று கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் நல்லு  வேல்பாண்டியை கைது செய்து, வழக்கின் புலன்விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில் இவ்வழக்கு  நேற்று (03.05.19) அரசு தரப்பு வழக்கறிஞர் தனலட்சுமி இவ்வழக்கை வாதிட்டார், வேல்பாண்டி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருமதி.ராஜலட்சுமி  தீர்ப்பளித்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!