வேடசந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த மூவர் கைது..

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தலின்படி ஏடி எஸ் பி சுகாசினி மேற்பார்வையில் மதுவிலக்கு ஆய்வாளர் ராதிகா மற்றும் காவலர்கள் வேடசந்தூர் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி பகுதிகளில் நடத்திய அதிரடி சோதனையில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்ற 3 பேரை கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த 106 பாட்டில்கள் மதுபானங்களை பறிமுதல் செய்து 3 பேர் மீதும் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!