பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை மடக்கி பிடித்து பொதுமக்கள்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் பாலமுருகன் என்பவர் உறவினரின் திருமண விழாவிற்கு சென்றிருந்த போது பட்டபகலில் அவரது வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலிசாரிடம் ஒப்பதடைத்தனர்…

வீட்டில் இருந்த 13 பவுன் நகை மற்றும் 2 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை போனதாக பாலமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில் உத்தப்பநாயக்கணூர் போலிசார் திருட்டில் ஈடுபட்ட இளையான்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்…

கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது பல ஊர்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலிசார் தெரிவித்தனர்…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!