கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை..

கடந்த 2016-ம் வருடம் மதுரை மாநகர் ஜீவா நகர் 2 வது தெருவை சேர்ந்த உதயசூரியன் என்பவரது மகன் முரளி என்பவரை கொலை செய்துவிட்டதாக உதயசூரியன் என்பவர் B6 ஜெயஹிந்துபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அரசியல் முன்விரோதம் காரணமாக முரளி என்பவரை குமார் என்ற ஹோம்கார்டு குமார் என்பவர் கொலை செய்தது விசாரணையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டடது. அதன் அடிப்படையில்  அவரை கைது செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

இவ்வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கனம் நீதித்துறை நடுவர் மாண்புமிகு. கார்த்திகேயன் அவர்கள் எதிரி குமார் என்ற ஹோம்கார்டு குமார் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதமும், கொலை மிரட்டல் பிரிவிற்கு மூன்று வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ.5000/-ம் விதித்து தீர்ப்பளித்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!