தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா..

மதுரையில் டாக்டர் APJ அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தலைவர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில்., தேசிய நல்லாசிரியர்  விருது பெற்ற  அலங்காநல்லூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முனைவர்  தா.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் அவர்களுக்கு செனாய்நகர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில்  பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர்  திவ்யா, சமூக ஆர்வலர்கள் மக்கள் தொண்டன் க.அசோக்குமார், சேக்மஸ்தான், எம்மால் இயன்றது கண்ணன், இல்ல காப்பாளர்கள் கார்த்திகேசன், அறிவழகன் மற்றும் மாணவர்கள்  கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!