தமிழ்நாடு அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்த நிகர்ஷாஜி; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு..

தமிழ்நாடு அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நிகர்ஷாஜியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார். ஆதித்யா எல்-1 என்ற செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் சனிக் கிழமையன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து விண்ணிற்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த நிகர்ஷாஜி பணியாற்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளியில் படித்த நிகர்ஷாஜி இஸ்ரோ விஞ்ஞானியாக உயர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பாடதிட்டத்தில் படித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிகர்ஷாஜியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில், “தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான Aditya-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் சாஜி-யை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து Chandrayaan முதல் Aditya வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். ISRO-வின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப் பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்ளோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்!” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!