வேலூர் மாவட்டத்தில் புதிய அரசு அதிகாரிகள் பொறுப்பேற்றனர்…

காட்பாடி தாசில்தாராக இரா சுந்தர் பொறுப்பேற்று கொண்டார். தேர்தல் ஆணையம் உத்திரவுப்படி இங்கிருந்த வட்டாட்சியர் சதீஷ் வேலூர் மாவட்டம் நெமிலி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டு அங்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.

பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளராக குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக குமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

பேர்ணாம்பட்டு வட்டாட்சியராக செண்பகவள்ளி பொறுப்பேற்றுக் கொண்டார். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டாட்சியராக பொறுப்பேற்ற செண்பகவள்ளிக் கு பணிமாறி செல்லும் கோட்டீஸ்வரன் பொறுப்புகளை ஒப்படைத்தார் புதிய வட்டாட்சியருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!