தென்காசி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி; தமிழ்நாடு அரசு உத்தரவு..

தென்காசி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட எஸ்.பி சாம்சன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த டி.பி.சுரேஷ்குமார், தென்காசி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட எஸ்.பியாக இருந்த இ.டி.சாம்சன் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிஐடியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!