கீழக்கரை ஜமாத் ஒலி பெருக்கியில் வித்தியாசமான அறிவிப்பு..

கீழக்கரையில் பல தெருக்கள், பல ஜமாத்தின் தலைமையில் இயங்கி வருகிறது.  பொதுவாக ஜமாத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள ஒலி பெருக்கியில் தொழுகைக்கான அழைப்பு மற்றும் மரண அறிவிப்பு மட்டுமே கொடுக்கப்படும்.

இந்நிலையில் கீழக்கரையில் பாரம்பரியம் மற்றும் பழமையான ஜமாத் ஒன்றில் பல முறை இன்று (26/07/2018) நடைபெற இருக்கும் ஜமாஅத் பொது குழுவிற்கு அத்தெரு மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பல முறை அறிவிப்பு ஒலி பெருக்கியில் செய்யப்பட்டது.

இதனால் அசாதரணமாக கடந்து செல்ல வேண்டிய பொதுக்குழு ஒரு அசாதாரண எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.  மேலும் பொதுவான ஒலிபெருக்கியில் அழைப்பு விடுத்தது குழப்பம் கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!