தென்காசி எம்பியின் கோரிக்கை ஏற்பு; அறிவிப்பு வெளியிட்ட தென்னக இரயில்வே நிர்வாகம்..

தென்காசி பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள், குருவாயூர் – புனலூர் விரைவு வண்டியை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தனுஷ்குமார் எம்பியிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் இந்த கோரிக்கையை, கடந்த மாதம் (20-07-2023) இந்திய இரயில்வே அமைச்சக முதன்மை செயல் இயக்குநர் (கோச்சிங்) தேவேந்திர குமாரை நேரில் சந்தித்து தனுஷ்குமார் எம்பி வலியுறுத்தினார். இதனை ஏற்று குருவாயூர் முதல் மதுரை வரை நீட்டிப்பு செய்து இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தென்காசி பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள், கேரள மாநில பெருவாரியான ஊர்களுக்கும், பெருநகரங்களுக்கும், இனி தினமும் நேரடியாக பயணிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இரயில்வே அமைச்சக முதன்மை செயல் இயக்குநர் தேவேந்திர குமார் மற்றும் தெற்கு இரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தென்காசி பாராளுமன்றத் தொகுதி பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!