தமிழக அரசின் ரூ. 2000/- வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுபட்டவர்கள் இணைந்து கொள்ளும் வழிமுறை..

தகுதி உடையவர்கள் விடப்பட்டிருந்தால் பின்வரும் இணையதளம் சென்று படிவத்தை பூர்த்தி செய்துகொடுத்து சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ. 2000/- வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுப்பட்டிருந்தால் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் சென்று படிவம் பதிவிறக்கம் செய்து முழுவிபரத்துடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் சமா்ப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!