அம்மா உணவகம் தனித்தன்மையை இருக்கிறதா??.. உணவை வீணடித்துவிட்டு அதிவேகமாக மூடப்படும் அம்மா உணவகம்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது அம்மா உணவகம் மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைப்பதற்காக அப்போதைய முதல் அமைச்சர்.ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது.

இதில் 4 மற்றும் 5 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகம் காலை 7 மணி முதல் 10மணி வரை செயல்படும் இந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விரைவாக வீடு செல்வதற்காக . காலை 8 மணிக்கே இட்லி மற்றும் சாம்பாரை கொட்டி விட்டு உணவு தீர்ந்து, விட்டது என்று பொது மக்களை திருப்பி அனுப்புகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் 10 மணி வரை இயங்க வேண்டிய உணவகம் காலை 8 மணிக்கே மூடப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

எனவே. அரசு அதிகாரிகள் முறையாக விரைந்து நடவடிக்கை எடுத்து உணவகம்10 மணி வரை செயல்பட வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!