கீழக்கரையில் மறைந்த மாணவி அனிதாவிற்கு இரங்கல் கூட்டம்..

கடந்த தமிழகத்தைச் சார்ந்த அனிதா என்ற மாணவி அதிகமான மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வின் கொடுமையினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இம்மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் நேற்று (04-09-2017) அன்று விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் அதன் தோழமை கட்சி சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அற்புதக்குமார், ஜஹுபர் சாதிக், முஹம்மது யூசுஃப், காங்கிரஸ் கட்சி சார்பாக சத்தியமூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக முருகானந்தம், மதிமுக சார்பாக சக்கரபாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக செல்வநாயகம், SDPI சார்பாக ராஜா அலாவுதீன், திமுக சார்பாக கென்னடி, இந்திய ஜனநாயக கட்சி சார்பாக தர்மலிங்கம் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!