அணைப்பட்டி வைகை ஆற்றில் மணல் திருடிய 4 பேர் கைது மாட்டுவண்டி ,ஆட்டோ பறிமுதல்    

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரொங்கப்ப நாயக்கன்பட்டியில் வைகை ஆறு தொடங்கி ராமராஜபுரம் ஊராட்சியில் வரை உள்ளது. இந்தப் பகுதிகளில் ஆண்டுகளுக்கு மேலாக இரவு பகல் என்று பாராமல் மணல் திருடும் கும்பல்   மணலை கடுமையாக திருடி விற்பனை செய்து வந்தனர்.  இதனை கடந்த 6 மாதமாக வருவாய்த்துறை மற்றும் போலீசார் மற்றும் கனிமவளத்துறை ஆகிய துறைகளில் ஒன்றிணைந்து பொதுமக்கள் ஒத்துழைப்போடு  மணல் திருட்டை தடுக்க ஆக செயல்பட்டு வருகிறார்கள்.நேற்று முன்தினம் 11.07.2019 இரவு      நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி தலைமையில் சித்தர்கள் நத்தம் பகுதியில் உள்ள வைகை

ஆற்றுப்படுகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்..அப்போது இரண்டு மாட்டு வண்டிகளில் சிலர் திருடி கொண்டிருந்தனர். அப்போது போலீசார் மடக்கி பிடிக்க போலீசார் முற்பட்டபோது மணல் கொள்ளையர்கள் தப்பி ஓடிய குண்டலம் பட்டியைச் சேர்ந்த குமார் மற்றும் சந்திரசேகர் ஆகியோர்களை பிடித்து கைது செய்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து இரண்டு பேர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர் இதேபோன்று விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் போலீஸார்   மட்டப்பாறை பகுதியிலுள்ள ஆற்றுப்படுகையில் முதல் 6 மணி முதல் சுமார் 11 மணி வரை இதில் உள்ள வயல்களில் பதுங்கியிருந்து ஆட்டோவில் சாக்கு மூட்டைகளாக கட்டி மணல் ஏற்றிய காரட்டுபட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் ரோஷன் குமார் வயது 19, மற்றும் மேல் நாச்சி குலத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் ஜெகன் வயது 45. ஆகிய 2 பேரையும் மடக்கிப்பிடித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!