கீழக்கரை அருகே நல்லிருக்கை கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம்..

கீழக்கரை தாலுகாவில் உள்ளடங்கிய நல்லிருக்கை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா  தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி மற்றும் மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது

இம்முகாமில் 3(மூன்று) பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைகளும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,  பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 24 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

இம்முகாமில் திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் கோகிலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முனிஸ்வரன் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ராஜா உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!