அம்மா அழைப்பு மையம்.. அம்மாவுடன் மறைந்து விட்டதா??

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் மிகவும் எதிர்பார்ப்புடன், மக்களின் குறைகள் 1100 என்ற எண்ணுக்கும் ஒரு அழைப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தீர்க்கப்படும் என்ற பிரமாண்ட அறிவிப்புடன் தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மக்களிடையே எதிர்மறையான கருத்துகள் வரத் தொடங்கியது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த எண்ணுக்கும் அழைத்தால் இசையுடன் கலந்த ஓசைதான் ஒலிக்கிறதே தவிர எடுத்து குறையை கேட்பதற்கு யாருமில்லை.

இது சம்பந்தமாக கீழக்கரைஅஹமது தெருவைச் சார்ந்த சமூக ஆர்வலர் சித்திக் கூறும்பொழுது, நான் இந்த அம்மா அழைப்பு மையம் மூலம் 100க்கும் மேற்பட்ட குறைகளை கூறி அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த எண்ணில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, மேலும் இத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் மூடு விழா நடத்தி விட்டதோ என்ற எண்ணம் எழுகிறது என்றார். அரசாங்கம் மக்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!