மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77வது வார்டு வெங்கட ராஜபுரம் பிபி மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .சாலையில் ஓடுகின்ற கழிவுநீர் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.