இராமநாதபுரம்: இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு ஏர்வாடி அருகே புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு திராவிடத் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் புவனேஷ்வரன், மாவட்ட அமைப்பு செயலாளர் காளிதாஸ், முன்னிலை வகித்தனர். மதுபாலன், ஜெகநாதன், கார்த்திக், ரெத்தினேஷ், ஊடகப்பிரிவு அரிவரசு மற்றும் அருண்அதியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You must be logged in to post a comment.