உள்ளாட்சி அமைப்புகளில் “ஏரியா சபா” அமைக்க வலியுறுத்தி ஆணையரிடம் ஆம் ஆத்மி கட்சி மனு..

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஏரியா சபா என்ற ஓர் அமைப்பு சட்டப்படி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த உரிமையை மக்களுக்கு வழங்காமல் பிற கட்சிகள் மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இதை நிவர்த்தி செய்யும் வண்ணம் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக மக்களின் உரிமைக்காக இது குறித்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் ஆணையாளர், நகராட்சிகள் ஆணையரகம் எழிலகம் சேப்பாக்கத்தில் ஆம் ஆத்மி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் மனு அளித்துள்ளது.

இத்தகவலை ஆம் ஆத்தி கட்சி செய்தி தொடர்பாளர் ஹாஜா முகைதீன் வெளியிட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!