தேவையுடையோருக்கு தினசரி உணவு… கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தொடர் பணி..

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக கொரான இரண்டாம் அலையினால் ஏற்பட்ட  முழு ஊரடங்கு காரணமாக ஏராளமான மக்கள் அன்றாட உணவுக்கு திண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் உள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக கடந்த ஒரு வாரமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மதிய உணவு மட்டும் சுமார் 350 பேர் பயன்பெறும் வகையில் தினமும் கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த  உணவு சேவை  முழு ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்று கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!