கீழக்கரை ஏர்வாடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி போன்ற ஊர்களில் இராமநாதபுரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் பொது இடங்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். இதில் ராமநாதபுரம் உதவி ஆணையாளர் (கலால்) சிவசுப்புரமணியன், ராமநாதபுரம் கோட்டா ஆய அலுவலர் (கலால்) முருகேசன் , கீழக்கரை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சேகு ஜலாலுதீன் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் யேசோதா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சி பொதுமக்கள் திரளாக கண்டுகளித்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!