கீழக்கரை தாசிம்பீவி கல்லூரி சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் நலச்சங்கம், சுழற்சங்கம் சார்பில் எய்ட்ஸ் . விழிப்புணர்வு பேரணி இன்று காலை11.00 மணியளவில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி கீழக்கரை நகரின் முக்கிய தெருக்களின் வழியாக சென்று இறுதியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் சுமார் 100 மாணவிகள் எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிய கோசங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் செனற்னர். இந்நிகழ்ச்சிக்கு ICTC கவுன்சிலர் கனகராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி துணைம முதல்வர்கள் முனைவர் ஏ இ ஜி சி ரஜனி மற்றும் முனைவர் பி. சுலைஹா ஷகீல் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் அ.ஜாஸ்மின் திருமதி, வே.அகிலா மற்றும் இரா.விசாலாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!