இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்புல்லாணி வட்டாரங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறை, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், மண்ணை மலடு ஆக்காமல், அதன் வளம் காக்க வேண்டும் மண் மாசடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார். மண் பராமரிப்பு குறித்து திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் விளக்கம் அளித்து
துவக்கி வைத்தார். மண் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ,உரப்பரிந்துரையின் அடிப்படையில் ரசாயன உரங்கள் இடுதல், மண்ணின் அங்கக வளத்தை பேணி காத்தல் குறித்து வேளாண் துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) அமர்லால் விளக்கி பேசினார். மண்வள அட்டையின் முக்கியத்துவம், மண்ணின் பௌதிக தன்மையை மேம்படுத்த பசுந்தழை, பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வது குறித்து குயவன்குடி வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ராம்குமார் பேசினார். மண்வளத்தை பேணிக்காக்க பயிர்களுக்கு மட்கிய தொழு உரம், ஆட்டு எரு. மக்கும் குப்பைகளை பயன்படுத்துதல் ஊட்டமேற்றிய தொழு உரம், மண் புழு உரம் தயாரித்து வழங்குதலின் அவசியம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) நாகராஜன் விளக்கினார். நிகழ்வில் பங்கேற்று மண்வள உறுதிமொழியை எடுத்துக் கொண்ட மண்டபம், திருப்புல்லாணி வட்டார விவசாயிகளுக்கு மண் வள அட்டை, மண்வளம் பாதுகாத்தல் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மண்டபம் துணை வேளாண் அலுவலர் தாமஸ் நன்றி கூறினார். மண்டபம் கேந்திர வித்யாலயா பள்ளியில் நடந்த உலக மண்வள தின விழிப்புணர்வு நிகழ்வில் மாநில வேளாண் திட்ட துணை இயக்குனர் அமர்லால் தலைமையில் மாணவர்கள் மண் வள பேணிக்காத்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












