மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தற்போது கொரோனாா வைரஸ் காட்டுத்தீயை போல் பரவி வருவதால் மே மாதத்தில் நீதிமன்றங்களை முடக்கி வைக்க தமிழ்நாடு பார் கவுன்சில்,
வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படி அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, மே மாதம் முழுவதும் அவசர வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரிப்பது என்றும் நீதிமன்ற திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதை மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கிறோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்று மே மாதத்தில் நீதிமன்றங்களை திறக்காமல் அவசர வழக்குகளை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கிறது. உயர்நீதிமன்றத்தின் முடிவு வழக்கறிஞர் சமுதாயத்தை மட்டுமல்லாமல் மக்களையும் பாதுகாக்கும் விதமாக அமைந்துள்ளது. நீதிமன்றங்கள் என்றும் மக்களை காக்கும் தெய்வமாக விளங்கும் என்பதற்கு இந்த உத்தரவே ஒரு உதாரணம் என தெரிவித்துள்ளார்.


You must be logged in to post a comment.