கீழக்கரையில் எம்ஆர்எப் ஒருங்கிணைப்பு குழு இளைஞர்களின் செயல்.! பொதுமக்களிடம் வரவேற்பு.!! 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வாலிபர்கள் தர்கா ஜகாத் கமிட்டியின் அங்கமான எம்.ஆர்.எப் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இரவு நேரத்தில் அதிக குளிர் ஏற்பட்டதால் கீழக்கரை சுற்றியுள்ள ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி முள்ளுவாடி போன்ற இடங்களுக்கு சென்று சாலைகளில் உறங்கிக் கிடக்கும் நபர்கள் மற்றும் தர்காவில் உறங்கிக் கிடக்கும் யாத்திரைகள் ஆகியோருக்கு போர்வைகள் உணவுப் பொருட்களை இளைஞர்கள் நேரடியாக சென்று வழங்கினர்.

இன்றைய காலகட்டத்தில் ஆடம்பரமாகவும் தவறான வழியில் செல்லக்கூடிய இளைஞர்கள் மத்தியில் இது போன்று சமூக சேவைகள் செய்து வரும் எம்ஆர்எப் ஒருங்கிணைப்பு குழு இளைஞர்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!