நிலக்கோட்டை அருகே வழிப்பறி வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர்: சிறப்பாக துப்பு துலக்கி கைது செய்த காவல் ஆய்வாளர் ஷர்மிளா..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஆவாரம்பட்டியைச் சேர்ந்த முத்துதேவர் மகன் தங்கமாயன் என்பவருக்கு வழிப்பறி வழக்கில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தலைமைறைவாக இருந்துள்ளார்.தற்போது இந்த வழக்கை சிறப்புடன் துப்பு துலக்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகு விளாம்பட்டி வட்ட காவல் ஆய்வாளர் ஷர்மிளா மற்றும் தலைமை காவலர்களான முனீஷ்வரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர்களின் விடா முயற்சியால் தங்கமாயனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


You must be logged in to post a comment.