ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளித்த இளைஞர் நீச்சல் தெரியாமல் பரிதாபமாக பலி..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாழையூத்து அருவியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குளித்துத்துக் கொண்டிருந்த போது திண்டுக்கல் பாரதிபுரம் மேட்டு பட்டியைச் சேர்ந்த சாமிகண்ணு என்ற இளைஞர் அருவியில் சற்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாகவும் அவருக்குப் நீச்சல் தெரியாததால் மீண்டு வரமுடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்திரப்பட்டி காவல்துறையினர் இறந்தவர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து அவருடன் வந்த மற்ற நபர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!