ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே களக்குடி விலக்கு அருகே ராமேஸ்வரம் – திருச்சி அரசு பேருந்து இன்று காலை 9:45 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது
எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் வடவயல் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கார்த்திக் 27, அண்ணாமலை நகரைச் சேர்ந்த பொக்காரு மகன் பால ராம்கி 30 ஆகிய இருவரும் அரசு பேருந்தின் முன் புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே இறந்தனர். இருவரின் உடலை போலீசார் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆர் எஸ் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









