திண்டுக்கல் பள்ளப்பட்டி அருகே சக ஊழியரை காண வந்தவர்கள் விபத்தில் சிக்கினர்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் சின்ன மருதுபாண்டியன் மகள் அங்கையர்கரசி, சென்னை மலை முரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

அவரை பார்க்க அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் சாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல், பிரபுராஜ் ஆகியோர் பள்ளபட்டி வந்து சந்தித்து விட்டு, பள்ளபட்டிலிருந்து சென்னை செல்ல கிளம்பினார்கள், அவர்கள் மதுரை to திண்டுக்கல் ரோட்டில் பொட்டிகுளம் அருகில் வந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து இடது புற பள்ளத்தில் விழுந்ததில் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, காயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!