சத்திரபட்டி அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி அருகே பழனி சாலையில் காரும் பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்தில் சரவணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஒரு சிலர் காயங்களுடன் உயிர் தப்பினர். சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!