மதுரை விளாங்குடி சேர்ந்த ராமன் இவரது மகன் சுதர்சன் வயது 32 சென்னையில் நிசான் கார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு ஏறி உள்ளார். மதுரையில் இறங்க வேண்டிய அவர் தூங்கியதால் திருமங்கலம் ரயில் நிலையத்தில் கிராசிங் மெதுவாக ரயில் சென்று கொண்டிருந்தது அப்பொழுது இறங்க முற்பட்டபோது ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு ஐந்து மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.
உடலை கைப்பற்றிய மதுரை ரயில்வே காவல்துறையினர் மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மதுரை ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.