பால்கரை பள்ளி அருகே கண்டெயினர் லாரி கவிழ்ந்து விபத்து

கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் பால்கரை பள்ளிவாசல் அருகே இன்று 15.02.2017 காலை  9  மணியளவில் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெயினர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இறைவன் அருளால் யாருக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லை. இதனால் சற்று நேரம் இந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

பின்னர் காவல் துறை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் காலை 10 மணியளவில் ராட்சத கிரேன் வாகனத்தின் உதவியுடன் கண்டெயினர் லாரி அப்புறப்படுத்தப்பட்டு சாலை போக்குவரத்து சீர் செய்யப்பட்டது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!