கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளிக்கூடம் எதிரே விபத்து – 2 பேர் படுகாயம்.

இன்று 15.02.2017 காலை  11.30  மணியளவில் இராமநாதபுரம் கீழக்கரை நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பைக்  மோதியதில் கீழ சிக்கல் பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள்  படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சிக்கிய ஆட்டோ டிரைவர் தப்பியோடி விட்டார்.

படுகாயம் அடைந்த இருவரும் கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை ஆம்புலன்ஸ் உதவியுடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!