ஜோலார்பேட்டை அருகே கார் விபத்து சென்னையை சேர்ந்த 3 பேர் பலி 2 பேர் படுகாயம்…

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கலந்திரா நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் ஒன்று டயர் வெடித்து சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் சென்னை போரூரை சேர்ந்த உமாபதி, பிரகாஷ், ஜானகிராமன் சிவா, வந்தவாசி சுப்பிரமணி ஆகியோர் வாடகை காரில் ஏலகிரி மலைக்கி சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்தது. டிரைவர்கள் பிரகாஷ், ஜானகிராமன், சிவா ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள் மற்ற 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தினை அமைச்சர் கே.சி.வீரமணி கலெக்டர் ராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!