5 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இன்றுமுதல் இயக்கம்!- பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்..

5 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன. அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 18) நடைபெற்ற புதிய அம்ரித் பாரத் ரயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரயில்களை காணொலி வழியாக கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

திப்ரூகர் – கோமதிநகர்

காமக்யா – ரோஹ்தக்

கொல்கத்தா (ஹௌரா) – ஆனந்த் விஹார்

கொல்கத்தா (சியால்டா) – பனாரஸ்

கொல்கத்தா (சந்திரகாச்சி) – தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

முன்னதாக சனிக்கிழமை(ஜன. 17),

அலிபூர்துவார் – எஸ்எம்விடி பெங்களூரு

அலிபூர்துவார் – மும்பை (பன்வேல்)

நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில்

நியூ ஜல்பைகுரி – திருச்சி ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்திருந்த நிலையில், நாட்டில் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!