5 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன. அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 18) நடைபெற்ற புதிய அம்ரித் பாரத் ரயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரயில்களை காணொலி வழியாக கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
திப்ரூகர் – கோமதிநகர்
காமக்யா – ரோஹ்தக்
கொல்கத்தா (ஹௌரா) – ஆனந்த் விஹார்
கொல்கத்தா (சியால்டா) – பனாரஸ்
கொல்கத்தா (சந்திரகாச்சி) – தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
முன்னதாக சனிக்கிழமை(ஜன. 17),
அலிபூர்துவார் – எஸ்எம்விடி பெங்களூரு
அலிபூர்துவார் – மும்பை (பன்வேல்)
நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில்
நியூ ஜல்பைகுரி – திருச்சி ஆகிய வழித்தடங்களில் 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்திருந்த நிலையில், நாட்டில் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









