இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளி மூன்றாம் பருவ வகுப்பு துவக்க நிகழ்ச்சி இன்று (02/01/2025) நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ், ஆசிரியைகள் கிருஷ்ணவேணி, பேபி சுகன்யா, சாமுண்டீஸ்வரி, காலை உணவு திட்ட பொறுப்பாளர்கள் அழகு சுந்தரி, புவனா, செல்வராணி பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் காயத்ரி நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.