பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்! முதலிடம் பிடித்த மாவட்டம் எது? – முழு விவரம் இங்கே!

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணியளவில் வெளியிட்டார். இதில் வழக்கம்போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வெளியானது.

இதையடுத்து மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வெழுதியோர் மொத்த எண்ணிக்கை : 7,92,494

மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316

மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178

தேர்ச்சி விவரங்கள்:

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)

மாணவியர்- 4,05,472 (96.70 %)

மாணவர்கள் -3,47,670 (93.16 %)

தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049

பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்

அரசுப் பள்ளிகள் – 91.94%

அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.71%

தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.88%

பள்ளிகள் வகைபாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்

இருபாலர் பள்ளிகள் – 95.30%

பெண்கள் பள்ளிகள் – 96.50%

ஆண்கள் பள்ளிகள் – 90.14%

அரசுப் பள்ளி மாணவர்களில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

அரியலூர் – 98.32%

ஈரோடு – 96.88%

திருப்பூர் – 95.64%

கன்னியாகுமரி – 95.06%

கடலூர் – 94.99%

அதிகம் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

அரியலூர் 98.82%

ஈரோடு 97.98%

திருப்பூர் மாவட்டத்தில் 97.53%

கோயம்புத்தூர் 97.4%

கன்னியாகுமரி 97.01%

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதம்

அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.99%

வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.68%

கலைப் பிரிவுகளில் 82.90%

தொழிற்பாடப் பிரிவுகளில் 84.22%

5 ஆண்டுகள் வாரியான தேர்ச்சி விகிதம்

2021:

தேர்வெழுதிய மாணவர்கள்: 8,16,473

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 8,16,473

தேர்ச்சி விகிதம்: 100%

2022

தேர்வெழுதிய மாணவர்கள்: 8,06,277

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,55,988

தேர்ச்சி விகிதம்: 93.76%

2023

தேர்வெழுதிய மாணவர்கள்: 8,03,385

தேர்ச்சிபெற்ற மாணவர்கள்: 7,55,451

தேர்ச்சி விகிதம் : 94.03%

2024

தேர்வெழுதிய மாணவர்கள்: 7,60,606

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,19,196

தேர்ச்சி விகிதம்: 94.56%

2025

தேர்வெழுதிய மாணவர்கள்: 7,92,494

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,53,142

தேர்ச்சி விகிதம்: 95.03%

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை

கடந்த ஆண்டு – 2,478

இந்த ஆண்டு – 2,638

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை

கடந்த ஆண்டு – 397

இந்த ஆண்டு – 436

தனித்தேர்வர்கள் தேர்ச்சி விவரம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோன்று தேர்வு எழுதிய 140 சிறைவாசி மாணவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் தேர்வு எழுதிய 16,904 தனித்தேர்வகளில் 5,500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

துணை தேர்வு எப்போது?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!