திட்டமிட்டபடி 12 ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்.பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பாராளுமன்ற தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின. அதனால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி மே 6-ந்தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மே 10-ந்தேதி பத்தாம் வகுப்புக்கும் பொதுத்தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இதில் எந்தவித கால தாமதமும் ஏற்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!